வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி
2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், டிக்கெட் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பேருந்துகளில் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பயணிகள் பேருந்து கட்டணங்களைச் செலுத்த அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
