ஜூலை 6 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம் – கல்வி அமைச்சு

ஜூலை 6 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம் – கல்வி அமைச்சு

எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதியுடன் அனைத்து பாடசாலைகளின் விடுமுறைகள் நிறைவுக்கு வருவதாக கல்வி அமைச்சர் டளஸ் அளகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை 4 கட்டங்களாக மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் அறிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதி முதல் மூன்று கட்டங்களாக பாடசாலை திறக்கப்பட்டு கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில்  ஜூலை 6முதல் ஜூலை 17 வரை தரம் 5, தரம் 11, தரம் 13 வகுப்புக்கள் ஆரம்பமாகும் என்றும் ஜூலை 20 தரம் 10, 12 வகுப்புக்கள் ஆரம்பமாகும் என்றும் ஜூலை 27 தரம் 3, தரம் 4, தரம் 6, தரம் 7, தரம் 8, தரம் 9 வகுப்புக்கள் தொடங்கும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதேவேளை க.பொ.த. உயர்தர பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 13 ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்தும் இணைந்திருங்கள்…