யாழில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் பலி...!

யாழில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் பலி...!

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் பகுதியை சேர்ந்த தங்கவடிவேல் முருகானந்தன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவர் கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன் தினம் திகதி அவர் மது போதையில் காணப்பட்ட நிலையில், நேற்று (19) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் பலி...! | Jaffna Man Dies In Alcohol Related Incident

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.