யாழில் கொடூரம் : மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி!
மருமகனின் வாள் வெட்டில் மாமியார் பலியான சம்பவம் நெல்லியடியில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது
வடமராட்சி பருத்தித்துறை கிராம கோடு பகுதியில் மனைவியின் தந்தையாரை வாளால் வெட்டி படுகாயப்படுத்திவிட்டு மனைவியின் தாயாரையும் வாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் சற்றுமுன்னார் வடமராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் நபரே மாமனாரை வெட்டி படுகாயப்படுத்திவிட்டு மாமியாரை படுகொலை செய்துள்ளார்.
குறித்த சந்தேக நபரை பருத்தித்துறை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
வாள்வெட்டு சம்பவத்தை தொடர்ந்து பருத்திதுறை காவல் நிலைய பொறுப்பு அதிகாரி தலைமை காவல்துறை பரிசோதகர் பிரியந்த அமர சிங்க தலைமையிலான 5 க்கு மேற்பட்ட காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.