நிலக்கரி விசாரணைக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு
நிலக்கரி பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (10) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
இதற்கமைய, நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தொடர்ந்து இந்த விசேட விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும் எனவும், இதற்காக தற்போது சேவையில் உள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.