10 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ள வாகனங்களில் விலை : வெளியான தகவல்
இலங்கையில் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வாகனங்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.
சந்தையில் நிலவும் மாற்றங்களுக்கு ஏற்ப வாகனங்களின் விலைகள் சுமார் 10 சதவீதத்தால் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
12 இலட்சம் ரூபாயால் உயர வாய்ப்பு
குறிப்பிட்ட சில வாகனங்களின் உத்தேச விலை அதிகரிக்கும் என குறிப்பிட்ட அவர் 140 இலட்சம் ரூபாயாக இருந்த Raize இன் விலை, சுமார் 8 முதல் 10 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும்.

Vezel இன் விலை சுமார் 12 இலட்சம் ரூபாயால் அதிகரிக்க வாய்ப்புள்ளதுடன் Yaris இன் விலை 4 முதல் 5 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவித்தார்.
மேலும் தற்போதைய சூழ்நிலையில் Land Cruiser இன் விலை சுமார் 30 இலட்சம் ரூபாயால் அதிகரிக்கக்கூடும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் சில வாரங்களில் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.