
இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் கொரோனா தொற்றுதியானவர்களில் 67 பேர் இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கொரோனா தொற்றுறுதியிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1057 ஆக அதிகரித்துள்ளது
நாட்டில் கொரோனா தொற்றுறுதியான ஆயிரத்து 858 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 789 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நேற்றைய தினம் வரை இலங்கையில் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொரளை மருத்துவ ஆய்வு நிறுவகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு நகரம் உள்ளிட்ட ஏனைய நகரங்களில் மூடப்பட்ட உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
எனினும், அவற்றில் அமர்ந்து உணவு உட்கொள்வதற்கான வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.
எவ்வாறாயினும், உணவக உரிமையாளர்களினால் சுகாதார பரிசோதகர்களிடம் கோரிக்கை விடுக்கப்படும் பட்;சத்தில் சுகாதார தரப்பி;னர் வழங்கும் ஆலோசணைகளை பின்பற்றி அதற்கான அனுமதியை வழங்க உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.