மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற சிறுவன் மாயம்

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற சிறுவன் மாயம்

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார். 

மூன்று சிறுவர்கள் இணைந்து ஆற்றில் நீராட சென்ற போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 

ஏனைய 2 சிறுவர்களும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாகக் மீட்கப்பட்டுள்ளனர். 

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய காணாமல்போன சிறுவனைத் தேடும் பணிகளில், பிரதேசவாசிகளும் கம்பளை பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-கண்டி நிருபர் ராஜ்-