யாழ். உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ சேவை - அமைச்சரின் அறிவிப்பு

யாழ். உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ சேவை - அமைச்சரின் அறிவிப்பு

இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கமளித்துள்ளார்.

அந்தவகையில், அடுத்த ஆண்டு முதல் வடக்கு மாகாணத்தில் மெட்ரோ பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

விசேட தேவையுடையோர்

மேலதிக கேள்வியை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம், வடக்கு மாகாணத்தில் பெருந்தொகையான விசேட தேவையுடையோர் இருக்கின்றனர்.

 

யாழ். உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ சேவை - அமைச்சரின் அறிவிப்பு | Metro Bus Service To Northern Province

மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து சக்கர நாற்காலிகள் பயன்படுத்தும் பெரும்பாலான நோயாளர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு போகும் சூழல் நிலவுகின்றது.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குறைந்தது ஒருநாளைக்கு ஒரு மெட்ரோ பஸ் சேவையை உங்களால் ஒழுங்கு செய்ய முடியுமாக இருந்தால் அதன்மூலம் பெரும்பாலான நோயாளர்கள் பயனடைவார்கள். இதனால் அதனை செய்ய முடியுமா? என்றார்.

 

மெட்ரோ சேவை அறிமுகம்

இதற்கு எழுந்து பதிலளித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அடுத்த வருடத்தில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மெட்ரோ சேவைகளை அறிமுகப்படுத்த நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

யாழ். உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ சேவை - அமைச்சரின் அறிவிப்பு | Metro Bus Service To Northern Province

வடக்கு மாகாணத்தில் பொது போக்குவரத்து சேவையை வினைத்திறனாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.