தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில்

தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில்

பொதுமக்கள் மத்தியில் அமைதியைப் பேணுவதற்காக, ராகம காவல்துறை எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

இதன்படி மறு அறிவிப்பு வரும் வரை காவல்துறை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதன்படி ஊரடங்கு பிரதேசங்களாக 246/கெந்தலியத்த பலோவ - மேற்கு, 246/C கெந்தலியத்த பலோவ - வடக்கு மற்றும் 181/G தம்புவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

[ZHKNHLY ]

மஹர சிறை மோதல்

நேற்று பிற்பகல் (01) மஹர சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்ட றிலையில் காயமடைந்த ஏழு கைதிகள் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு ஒருவர் உயிரிழந்தார்.

தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் | Curfew Continues To Be In Effect

மேலும் ஆறு பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், கைதிகளின் உறவினர்களும் உள்ளூர் மக்களும் சிறையைச் சுற்றித் திரண்டதோடு , இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், குறித்த குறித்த சேவகர் பிரிவுகளில் மறு அறிவிப்பு வரும் வரை  பொகாவல்துறை  லிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.