பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

பொதுத்தேர்தல் காரணமாக முக்கிய பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய க.பொ.த. உயர்தரப் பரீட்சை புரட்டாசி 07ஆம் திகதி தொடக்கம் ஐப்பசி 2ஆம் திகதி வரையும், தரம் 05 ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை புரட்டாசி 13ஆம் திகதியும் நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலை ஆவணி 08 ஆம் நடத்த தீர்மானிக்கப்பட்டால் க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கு தடைகள் ஏற்படலாம்.

இதன் காரணமாகவே ஆவணி மாதம் நடத்த திட்டமிட்டிருந்த இரண்டு முக்கிய பரீட்சைகளும் புரட்டாசி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.