இறுதி கும்பல் பெரஹரா வீதி உலா ஆரம்பமானது

இறுதி கும்பல் பெரஹரா வீதி உலா ஆரம்பமானது

2026 கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் ஏசல பெரஹரா திருவிழாவின் இறுதி கும்பல் பெரஹரா தற்போது வீதி உலாவை ஆரம்பித்துள்ளது.

மாலை 06.28 மணி சுப முகூர்த்தத்தில் ஆரம்பமான பெரஹரா, ஸ்ரீ தலதா வீதியில் பயணித்து ராஜா வீதி வழியாக மேலே வந்து ஐந்தாவதும் இறுதியுமான கும்பல் பெரஹராவாக நிறைவடையும்.

இன்று (22) புனித பேழை சுமந்து செல்லும் நிகழ்வு, ஸ்ரீ தலதா மாளிகையின் யானைப்பந்தியின் இளவரசனாகக் கருதப்படும் 'சிங்க ராஜா' யானையால் மேற்கொள்ளப்படுகிறது.

'மியன் ராஜா' மற்றும் 'புலதிசி ராஜா' ஆகிய இரண்டு யானைகளும் இருபுறமும் உடன் செல்கின்றன.