
கட்டார் உலகக்கிண்ணம்- ஆசியக் கால்பந்து கிண்ண தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு!
2022ஆம் ஆண்டு கட்டார் உலகக்கிண்ணம் மற்றும் ஆசியக் கிண்ண கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருந்த கட்டார் உலகக்கிண்ண தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக இந்த போட்டிகள் 2021ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது போட்டி எங்கெல்லாம் நடைபெற இருந்ததோ, அதே இடத்தில் அடுத்த வருடம் நடைபெறும், என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை ஃபிஃபா மற்றும் ஆசிய கால்பந்து சங்கம் இணைந்து எடுத்துள்ளது.