
காவல்துறையினரின் விசேட சோதனை நடவடிக்கையில் 1,662 பேர் கைது
கடந்த 24 மணிநேரத்தில் மேல்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் 1,662 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட நபர்களில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 696 பேரும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.