
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 5 பேர் குணமடைந்தனர்
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 5 பேர் குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 760 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 902 ஆக பதிவாகியுள்ளது.
அவர்களில் 2 ஆயிரத்து 760 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், 131 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 74 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்த தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது