
பயணக் கட்டுப்பாடுகளால் மாலைதீவில் சிக்கித் தவித்த 47 இலங்கையர்கள் நாடு திரும்பினார்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மாலைதீவில் சிக்கித் தவித்த 47 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
இந்த குழுவினர் இன்று (புதன்கிழமை) மதியம் 12.08 மணியளவில் மாலி விமான நிலையத்திலிருந்து விசேட இலங்கை எயார்லைன்ஸ் விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் பெரும்பான்மையானவர்கள் மாலைதீவில் சுற்றுலாத் துறையில் பணிபுரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு வருகைதந்த அனைத்து பயணிகளுக்கும் பி.சி.ஆர். சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.