வரலாற்றில் பதிவான நாடாளுமன்ற உறுப்பினரின் வருகை!

வரலாற்றில் பதிவான நாடாளுமன்ற உறுப்பினரின் வருகை!

நாடாளுமன்ற உறுப்பினரான மதுர விதானகே புதிய நாடாளுமன்ற அமர்விற்கு படகில் வந்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஸ்ரீலங்காவின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு இன்று ஆரம்பமாகியிருந்த நிலையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினரான மதுர விதானகே இவ்வாறு படகில் வந்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

இது தொடர்பில் கோட்டே நகரசபையின் முன்னாள் நகர முதல்வரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மதுர விதானகே கருத்துக் கூறுகையில்,

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக தியவன்ன ஓயா அபிவிருத்தி செய்யப்பட்டது. இதனால் இன்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு படகில் வரமுடிந்தது.

இதன்மூலம் கொழும்பு நகர வீதிகளில் வாகன நெரிசலை குறைப்பதற்காக நீர் ஓடைகள் மூலம் போக்குவரத்து செய்வதில் பொது மக்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.