சென்னை அணி வீரர்களையும் விட்டு வைக்காத கொரோனா...!

சென்னை அணி வீரர்களையும் விட்டு வைக்காத கொரோனா...!

எதிர்வரும் ஐ.பி.எல். தொடரில் பங்குகொள்ள உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஒருவர் உட்பட 10 ஊழியர்களுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கேட்பதற்காக டுபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உறுப்பினர்கள் நேற்று கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

கறித்த பரிசோதனையின் இறுதி முடிவுகள் இன்று வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் ஊழியர்கள் சிலருக்கும் அந்த அணியின் பந்து வீச்சாளர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை பரிசோதனைகளில் உறுதிப்பட்டுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.