6 மாத இடைவெளிக்கு பின்னர் மீண்டும் மேசை பந்து போட்டிகளை நடத்துவதற்கு அவதானம்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆறு மாத கால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் மேசை பந்து போட்டிகளை ஆரம்பிப்பது குறித்த முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றதாக இலங்கை மேசை பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த கூட்டத்தில், போட்டிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பல விடயங்கள் ஆராயப்பட்டதாக விளையாட்டு துறை அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய முதலாவது போட்டியான மேயர் கிண்ண போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கண்டியில் ஆரம்பமாகவுள்ளது.
இதனை தொடர்ந்து நவம்பர் மாதம் தேசிய மட்டத்திலான கிண்ண போட்டித் தொடர் ஆரம்பமாகும்.
இதனை தொடர்ந்து தெற்காசிய கனிஷ்ட மேசை பந்து போட்டிகள் பங்களாதேஷில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.