
பிரபல கால்பந்தாட்டவீரர் நெய்மருக்கு கொரோனா
பிரேசில் நாட்டைச் சேர்ந்வரும் உலகின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவருமான நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நெய்மர், தற்போது பி.எஸ்.ஜி. எனப்படும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் எனும் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த யு.இ.எப்.ஏ. சாம்பியன் லீக் தொடரின் இறுதி ஆட்டத்தில் பைரன் முனிச் கிளப் அணியிடம் பாரிஸ்-சாயின்ட் ஜெர்மைன் அணி தோல்வியடைந்தது.
இதற்கிடையில் அணி சார்பில் நடத்தப்பட்ட உடல் பரிசோதனையில் கொரோனா பாரிஸ்-சாயின்ட் ஜெர்மைன் அணியில் விளையாடிய நெய்மர், ஏஞ்சல் டிமரியா மற்றும் லியான்டிரோ ப்ரேடஸ் ஆகிய 3 வீரர்களுக்கும் கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவல் பி.எஸ்.ஜி. கிளப் அணியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பி.எஸ்.ஜி. கிளப் அணி வீரர்கள் அனைவருக்கும் நாளை பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அண்மையில் உலகின் மின்னல்வேக மனிதர் என அறியப்படும் ஜமைக்காவின் உசைன் போல்ட்டுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.