ஆஸ்திரியா அரசி எலிசபெத் கொலை செய்யப்பட்ட நாள்: 10-9-1898

ஆஸ்திரியா அரசி எலிசபெத் கொலை செய்யப்பட்ட நாள்: 10-9-1898

பவேரியாவின் மியூனிக் நகரில் பிறந்த எலிசபெத் தனது தாய்வழி உறவினனான ஆஸ்திரியாவின் முதலாம் பிரான்ஸ் ஜோசப்பை ஏப்ரல் 24, 1854 இல் மணந்து ஆஸ்திரியாவின் அரசியானார். 1867 ஆம் ஆண்டில் ஹங்கேரி ஆஸ்திரியாவுடன் இணைக்கப்பட்ட போது இருவரும் ஆஸ்திரியா-ஹங்கேரியின் அரசனாகவும், அரசியாகவும் முடி சூடினார். அக்காலத்தில் மிகவும் அழகானவர் எனப் பெயரெடுத்திருந்த

 

பவேரியாவின் மியூனிக் நகரில் பிறந்த எலிசபெத் தனது தாய்வழி உறவினனான ஆஸ்திரியாவின் முதலாம் பிரான்ஸ் ஜோசப்பை ஏப்ரல் 24, 1854 இல் மணந்து ஆஸ்திரியாவின் அரசியானார். 1867 ஆம் ஆண்டில் ஹங்கேரி ஆஸ்திரியாவுடன் இணைக்கப்பட்ட போது இருவரும் ஆஸ்திரியா-ஹங்கேரியின் அரசனாகவும், அரசியாகவும் முடி சூடினார்.

அக்காலத்தில் மிகவும் அழகானவர் எனப் பெயரெடுத்திருந்த எலிசபெத், தனது உடலழகைப் பேணுவதில் மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டார். 1889 ஆம் ஆண்டில் இவர்களது ஒரே மகனும் அரச வாரிசுமான ருடோல்ஃப் 30 வயதிலேயே அவரது காதலியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

 


இதனை அடுத்து எலிசபெத் தனது கடைசிக் காலத்தில் பல நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதில் தனது காலத்தைக் கழித்தார். 1898 ஆண்டு இதே தேதியில் எலிசபெத் தனது 60வது வயதில் ஜெனீவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது ‘லுயிஜி லூச்சினி’ என்ற தீவிரவாதியினால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.