
இராணுவ தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை!
பொது மக்கள், கொரோனா தொற்று குறித்த சுகாதார ஆலோசனைகளை புறக்கணிப்பது துரதிர்ஷ்டவசமானது என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான எந்தவொரு சுகாதார முறைகளையும் பொது மக்கள் பின்பற்றாத சூழ்நிலை சமூகத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.