மேலும் 136 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர்

மேலும் 136 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர்

கொரோனா தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்த மேலும் 136 பேர், இன்று (திங்கட்கிழமை) தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படவுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

கந்தகாடு, பியாகாமா மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் உள்ளவர்களே இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை 43,684 பேர், கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவுசெய்துள்ளனர். தற்போது 6,182 பேர் 66 தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண நேற்று மாத்திரம் 1,785 பி.சி.ஆர்.சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தவகையில் நாட்டில் இதுவரை 268,371 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 287 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இதுவரை மூவாயிரத்து 88பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திருப்பியுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் 186 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன் நாட்டில் 13 பேர் வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது