
அவசர அமைச்சரவை கூட்டத்தை நடத்த தயாராகும் கோட்டாபய!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அவசரமாக அமைச்சரவைக் கூட்டம் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
வழமையாக அமைச்சரவை பிரதி புதன் கிழமை தோறும் மாலை 4 மணிக்கு நடைபெறும். 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ள நிலையில், ஜனாதிபதி இந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள சில சரத்துக்களுக்கு பிரதான பௌத்த பிக்குகள், எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில், இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக ஆராயப்படும் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.