
தேங்காயின் விலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்
சந்தையில் அதிகரித்துள்ள தேங்காயின் விலையானது, எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் குறைவடையும் என தேங்காய் அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபா வரையில் அதிகரித்துள்ளது.
இடைத்தரகர்களின் செயற்பாடு காரணமாக சந்தையில் தேங்காய் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக அந்த அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.