
பாடசாலை மாணவிக்கு நேர்ந்த துயரம்! தீவிர விசாரணையில் பொலிஸார்
இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை - பங்டாரவத்தை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் மாலையில் குறித்த மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வீட்டினுள் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.