
எதிர்வரும் 11 ஆம் திகதி வரை பூட்டு..!
குவைட்டில் உள்ள இலங்கை தூதரகம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைட்டில் உள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் 3 அதிகாரிகள் மற்றும் தூதரகத்தின் காப்பகத்தில் இருந்த 44 பணிப்பெண்களுக்கும் கோவிட் தொற்றுறுதியாகியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.