மேலும் 465பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வெளியேற்றம்!
கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 465பேர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 45,175பேர், இதுவரையில் மொத்தமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முப்படையினரால் பராமரிக்கப்பட்டுவரும் 67 தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில், 7,233 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்களில் உள்ளனர்.
இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் 3,349 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 28பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
இதற்கமைய இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தொற்று உறுதியானவர்களில் 150பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு கொரோனா தொற்று சந்தேகத்தில் 36பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், 13பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.