
யாழில் இருந்து வந்த புகையிரதத்துடன் மோதி உடல் உருகுலைந்து உயிரிழந்த நபர்
யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வைத்து இன்று குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான நபரின் சடலம் அடையாளம் காண முடியாத அளவு உருகுலைந்த நிலையில் காணப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.