
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 294 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 595 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 8 ஆயிரத்து 885 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 294 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 603 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 52 ஆயிரத்து 938 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 653 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-
அரியலூர் - 200
செங்கல்பட்டு - 2,327
சென்னை - 12,013
கோவை - 4,913
கடலூர் - 1,376
தர்மபுரி - 893
திண்டுக்கல் - 392
ஈரோடு - 1,164
கள்ளக்குறிச்சி - 356
காஞ்சிபுரம் - 875
கன்னியாகுமரி - 789
கரூர் - 450
கிருஷ்ணகிரி - 793
மதுரை - 705
நாகை - 466
நாமக்கல் - 1,039
நீலகிரி - 803
பெரம்பலூர் - 129
புதுக்கோட்டை - 726
ராமநாதபுரம் - 151
ராணிப்பேட்டை - 491
சேலம் - 2,624
சிவகங்கை - 217
தென்காசி - 392
தஞ்சாவூர் - 1,746
தேனி - 507
திருப்பத்தூர் - 502
திருவள்ளூர் - 1,617
திருவண்ணாமலை - 970
திருவாரூர் - 935
தூத்துக்குடி - 517
திருநெல்வேலி - 866
திருப்பூர் - 1,611
திருச்சி - 741
வேலூர் - 851
விழுப்புரம் - 914
விருதுநகர் - 216
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 2
உள்நாடு - 13
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2
மொத்தம் - 46,294