கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 46 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 294 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.

தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 595 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 8 ஆயிரத்து 885 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 294 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

 

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 603 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 52 ஆயிரத்து 938 ஆக அதிகரித்துள்ளது.

 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 653 ஆக உயர்ந்துள்ளது.

 

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

 

அரியலூர் - 200

செங்கல்பட்டு - 2,327

சென்னை - 12,013

கோவை - 4,913

கடலூர் - 1,376

தர்மபுரி - 893

திண்டுக்கல் - 392

ஈரோடு - 1,164

கள்ளக்குறிச்சி - 356

காஞ்சிபுரம் - 875

கன்னியாகுமரி - 789

கரூர் - 450

கிருஷ்ணகிரி - 793 

மதுரை - 705

நாகை - 466

நாமக்கல் - 1,039

நீலகிரி - 803

பெரம்பலூர் - 129

புதுக்கோட்டை - 726

ராமநாதபுரம் - 151

ராணிப்பேட்டை - 491

சேலம் - 2,624

சிவகங்கை - 217

தென்காசி - 392

தஞ்சாவூர் - 1,746

தேனி - 507

திருப்பத்தூர் - 502

திருவள்ளூர் - 1,617

திருவண்ணாமலை - 970

திருவாரூர் - 935

தூத்துக்குடி - 517

திருநெல்வேலி - 866

திருப்பூர் - 1,611

திருச்சி - 741

வேலூர் - 851

விழுப்புரம் - 914

விருதுநகர் - 216

விமானநிலைய கண்காணிப்பு 

வெளிநாடு - 2

உள்நாடு - 13

ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

 

மொத்தம் - 46,294