902 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது

902 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது

இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்ட 902 கிலோ மஞ்சளுடன், மன்னார் - தாழ்வுப்பாடு பகுதியில்; இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில், கடற்படையினர் நேற்றைய தினம் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மற்றும் புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்த 22 மற்றும் 48 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ள மஞ்சள், சுங்க அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, தனிமைபடுத்தல் நிறைவடைந்ததன் பின்னர் அவர்கள் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.