
இரண்டாவது தொற்று அலையை தடுக்க ஸ்பெயினில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகள்!
ஐரோப்பாவில் தலைதூக்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை தடுக்க கடுமையாக போராடிவரும் ஸ்பெயின், புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள மிகக் கடுமையான கட்டுப்பாடுகளினால் தலைநகர் மட்ரிட்டில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சிக்கியுள்ளனர்.
இந்த வார இறுதியில் இருந்து, மக்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு வெளியே அத்தியாவசிய பயணங்களுக்கு மட்டுமே பயணிக்க முடியும்.
மதுபானசாலைகள் மற்றும் உணவகங்கள் 22:00 மணிக்குக்குப் பிறகு சேவை செய்ய முடியாது. எந்தவொரு அமைப்பிலும் சந்திக்க அதிகபட்சம் ஆறு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். தலைநகரைச் சுற்றியுள்ள ஒன்பது நகரங்களிலும் அவை நடைமுறைக்கு வருகின்றன.