
உலக விலங்கு நாள்
உலக விலங்கு நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4-ல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. விலங்குகள் சரணாலயங்கள் இந்நாளின் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.
உலக விலங்கு நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4-ல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. விலங்குகள் சரணாலயங்கள் இந்நாளின் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்-
* 1777 - அமெரிக்கப் புரட்சி: பிலடெல்பியாவின் ஜெர்மண்டவுன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஜார்ஜ் வாஷிங்டனின் படைகளை சேர் வில்லியம் ரோவின் பிரித்தானியப் படைகள் தோற்கடித்தன. * 1824 - மெக்சிகோ குடியரசு ஆகியது. * 1830 - பெல்ஜியம் நெதர்லாந்து நாட்டில் இருந்து பிரிந்து தனிநாடாகியது. * 1853 - கிரிமியப் போர்: ஒட்டோமான் பேரரசு ரஷ்யா மீது போரை அறிவித்தது. * 1883 - ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது. * 1910 - போர்த்துக்கல் குடியரசு அறிவிக்கப்பட்டது. இரண்டாம் மனுவேல் மன்னன் ஐக்கிய இராச்சியத்துக்கு தப்பினான். * 1918 - நியூ ஜேர்சியில் ஷெல் கம்பனியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
* 1943 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா சொலமன் தீவுகளைக் கைப்பற்றியது. * 1957 - பண்டா - செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக கண்டிக்கு நடைப்பயணம் நடத்தப்பட்டது. * 1957 - முதலாவது செயற்கைச் செய்மதி ஸ்புட்னிக் 1 பூமியைச் சுற்றி வர விண்ணுக்கு அனுப்பப்பட்டது. * 1958 - பிரான்சின் ஐந்தாவது குடியரசு அமைக்கப்பட்டது. * 1959 - லூனா 3 விண்ணுக்கு ஏவப்பட்டது. இது சந்திரனைச் சுற்றி வந்து அதன் தொலைவுப் படத்தை பூமிக்கு அனுப்பியது. * 1963 - கியூபாவை சூறாவளி தாக்கியதில் 7,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். * 1965 - ஐக்கிய அமெரிக்காவுக்கு சென்ற முதலாவது பாப்பாண்டவர் பாப்பரசர் ஆறாம் போல் நியூயோர்க் வந்ட்தடைந்தார். * 1966 - பசூட்டோலாந்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று லெசோத்தோ எனப் பெயர் மாற்றம் பெற்றது. * 1992 - மொசாம்பிக்கின் 16 ஆண்டு கால உளநாட்டுப் போரை முடிவுக்கு வந்தது. * 1992 - ஆம்ஸ்டர்டாம் நகரில் குடியிருப்பு மனைகள் மீது விமானம் ஒன்று மோதியதில் தரையில் இருந்த 39 பேர் உட்பட 43 பேர் கொல்லப்பட்டனர்.
* 1997 - ஐக்கிய அமெரிக்காவின் வரலாற்றில் இரண்டாவது மிகப் பெரிய வங்கிக் கொள்ளை வட கரொலைனாவில் இடம்பெற்றது. 17.3 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இவற்றில் 95 விழுக்காடு பணம் திரும்பப் பெறப்பட்டது. * 2001 - சைபீரியாவில் விமானம் ஒன்றை உக்ரைனின் ஏவுகணை தாக்கியதில் விமானம் கருங் கடலில் வீழ்ந்து 78 பேர் கொல்லப்பட்டனர்.