சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 25 இலட்சத்தை கடந்தது

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 25 இலட்சத்தை கடந்தது

சர்வதேச ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் 3 இலட்சத்து 20 ஆயிரத்து 572 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது

இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 இலட்சத்து 9 ஆயிரத்து 864 ஆக உயர்வடைந்துள்ளது.

மூவாயிரத்து 899 பேர், கடந்த 24 மணிநேரத்தில் சர்வதேச ரீதியில் மரணித்துள்ளனர்

இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 இலட்சத்து 18 ஆயிரத்து 95 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொவிட்-19 தொற்றுக்காரணமாக 565 பேர் மரணித்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 55 ஆயிரத்து 35 பேருக்கு இந்தியாவில் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய, 75 இலட்சத்து 47 ஆயிரத்து 762 பேருக்கு இந்தியாவில்; இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, கொவிட்-19 காரணமாக இந்தியாவில்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 14 ஆயிரத்து 629 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 44 ஆயிரத்து 188 பேருக்கு அமெரிக்காவில் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய, 83 இலட்சத்து 87 ஆயிரத்து 46 பேருக்கு அமெரிக்காவில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம், கடந்த 24 மணிநேரத்தில் 446 மரணங்கள் அங்கு பதிவாகியுள்ளன

இதன்படி, கொவிட்-19 காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 24 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது.