இங்கிலாந்தில் அமுல்படுத்தப்பட உள்ள ஊரடங்கு உத்தரவு..!

இங்கிலாந்தில் அமுல்படுத்தப்பட உள்ள ஊரடங்கு உத்தரவு..!

இங்கிலாந்தில் கொரோனா அச்சம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு 4 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜொன்சன் இது குறித்த திட்டத்தினை நாடாளுமன்றத்தில் முன்வைத்ததாகவும் அதற்கு அதிகமானோரின் ஆதரவான வாக்குகளும் கிடைக்கப்பெற்றதனை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்திற்கு ஆதரவாக 477 வாக்குகளும் எதிராக 39 வாக்குகளும் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.