
புயலால் நிலைகுலைந்தது வல்வெட்டித்துறை! பலர் இடம்பெயர்வு
யாழ் - வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியில் நேற்றிரவு வீசிய கடும் காற்றுக் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சுமார் 55 குடும்பங்களைச் சேர்ந்த 186 நபர்கள் இடைந்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பலத்த காற்றுக் காரணமாக வீடுகள், மீன்பிடி உபகரணங்கள் என்பன சேதமாகியுள்ளன.