யாழ்ப்பாணத்தில் கொட்டித்தீர்த்த மழை! எங்கும் வெள்ளம்
புரவி புயல் இலங்கையை கடந்து சென்றிருந்தாலும் நாட்டில் பல பகுதிகளில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் நாடளாவிய ரீதியில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
குறிப்பா வடக்கில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளது.
இன்று காலை யாழ்ப்பாணத்தில் பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பல கடைகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.