
புரெவி சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள்...!
புரெவி காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று முற்பகல் 9 மணி மணிவரையான காலப்பகுதியில் 17 ஆயிரத்து 243 குடும்பங்களை சேர்ந்த 57 ஆயிரத்து 513 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் கணபதிபிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிப் பொருள்கள் மற்றும் சமைத்த உணவை வழங்குவதற்கு 18 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படவேண்டும் என்று அவர், இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவிடம் கோரியுள்ளார்.
இதற்கமைய நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 829 குடும்பங்களும் வேலனை பிரதேச செயலர் பிரிவில் 777குடும்பங்களும் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் 287 குடும்பங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் காரைநகரில் 39 குடும்பங்களும் யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 994 குடும்பங்களும் நல்லூரில் ஆயிரத்து 813 குடும்பங்களும் கோப்பாயில் 3 ஆயிரத்து 517 குடும்பங்களும் சங்கானையில் ஆயிரத்து 233 குடும்பங்களும் சண்டிலிப்பாயில் ஆயிரத்து 296 குடும்பங்களும் பாதி;கப்பட்டுள்ளன.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 62 வீடுகள் முழுமையாகவும் 2 ஆயிரத்து 535 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 38 நலன்புரி நிலையங்களில் அமைக்கப்பட்டு ஆயிரத்து 959 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 445 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவுக்கு உள்பட்ட கொடிகாமத்தில் ஒருவரும் சங்கானை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுழிபுரத்தில் மீனவர் ஒருவரும் உயிரிழந்தனர்.
பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வல்வெட்டித்துறையில் 5 பேரும் சங்கானை பிரதேச செயலக பிரிவில் ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் கணபதிபிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.