யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் புகுந்தது வெள்ள நீர்!
ரற்ற காலநிலை காரணமாக நேற்றையதினம் பெய்த தொடர்மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஒருபகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது என பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது முகநூல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம்,
யாழ் நகரில் சரியான வடிகால் அமைப்பு வசதியின்மையினால் போதனா வைத்தியசாலையின் சில விடுதிக் கட்டடங்களின் பகுதிகள் நீரில் மூழ்கின.
சில வைத்திய சேவைகள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு சிரமத்தின் மத்தியில் சிகிச்சை வழங்கப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுத்து எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அனர்த்தம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் இந்தப் பதிவினூடாக கேட்டுக்கொண்டுள்ளார்.