பருத்தித்தித்துறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவருக்கு கொரோனா.
யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 315 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டதில் பருத்தித்தித்துறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பானர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாமி உறவுமுறை ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்பில் ஒரு மாதம் தங்கியிருந்து வீடு திரும்பிய குடும்பத்தில் 34 வயதுடைய குடும்பத் தலைவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.
இவரது குடும்பம் கடந்த 16 நாள்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவரது மனைவி, பிள்ளை மற்றும் மாமியார் என மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.