
நள்ளிரவு வெளியான நிலவரம் யாழில் 75 ஆயிரம் பேர் பாதிப்பு
யாழ்.மாவட்டத்தில் புரவி புயல் அதனாலேற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக நள்ளிரவு வரை 22624 குடும்பங்களை சேர்ந்த 75013 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இதுவரை இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை 6 நபர்கள் காயமடைந்துள்ளதாக ரீ.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது 21 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 387 குடும்பங்களை சேர்ந்த 1332 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 93 வீடுகள் முழுமையாகவும், 2970 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.