கொரோனா செயலணியின் முடிவு கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை!யாழ் அரச அதிபர்.

கொரோனா செயலணியின் முடிவு கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை!யாழ் அரச அதிபர்.

மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும்  தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தப்படுவதற்கு உரிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

“மருதனார்மடம் பொதுச் சந்தையில் 25 வியாபாரிகளுக்கும் அவர்களின் உறவினர்கள் 7 பேருக்கும் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரனுடன் கலந்தாலோசித்து இந்தக் கோரிக்கை கோவிட் – 19 நோயைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணியிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

செயலணியின் முடிவு கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் அனைவரையும் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்படவுள்ளனர். அவர்களுடன் தொடர்புடையவர்களும் சுயதனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
அத்துடன், தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படவுள்ளன.