
யாழ். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவிகள் இருவருக்கு கொரோனா உறுதி
யாழ். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று கண்டுபிடிக்கப்பட்ட 6 தொற்றாளர்களில் இவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களது தந்தை மருதனார்மடம் சந்தையுடன் தொடர்பில் இருந்து அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து கல்லூரி மாணவர்கள் 80 பேர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் இரு வாரம் சுய-தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாகாண பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.