சில நாடுகள் மட்டும் முயற்சிப்பதால் உலகம் வளர்ச்சி அடைய முடியாது- பிரதமர் மோடி பேச்சு

இந்தியா-ஜப்பான் 6-வது ஒத்துழைப்பு மாநாடு இன்று நடந்தது. இதில் பேசிய பிரதமர் மோடி, சில நாடுகள் மட்டும் முயற்சிப்பதால் உலகம் வளர்ச்சி அடைய முடியாது என கூறினார்.

இந்தியா-ஜப்பான் 6-வது ஒத்துழைப்பு மாநாடு இன்று நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

உலக நாடுகளை வளர்ச்சி அடைய செய்ய வேண்டுமென்றால் ஒருமையப்படுத்தப்பட்ட அணுகு முறையை பின்பற்ற வேண்டும். சில நாடுகள் மட்டும் முயற்சிப்பதால் உலகம் வளர்ச்சி அடைந்து விட முடியாது.

இதன் அட்டவணை பெரிதாக இருக்க வேண்டும். அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து முயற்சித்தால்தான் உலகளாவிய வளர்ச்சியை கொண்டு வர முடியும். இந்த நடவடிக்கைகளில் மனிதநேயத்துடன் இருக்க வேண்டும்.

கடந்த காலங்களில் மனித நேயம், ஒத்துழைப்புக்கு பதிலாக மோதலின் பாதையை கையில் எடுத்தார்கள். ஏகாதி பத்தியம், உலகப் போர், ஆயுத பந்தயம், விண்வெளி பந்தயம் போன்ற அனைத்திலும் எங்களிடம் சமரச திட்டங்கள் இருந்தன.

ஆனால் மற்றவர்கள் அதை கீழே இழுப்பதையே நோக்கமாக கொண்டு இருந்தனர். இப்போது நாம் ஒன்றாக எழுந்து செல்வோம்.

வளர்ச்சி திட்டங்கள் மனிதனை மையமாக வைத்து பின்பற்றப்பட வேண்டும். மேலும் நமது சூழலுடன் ஒத்துப்போக வேண்டும்.

பாரம்பரிய இலக்கியங்கள், வேதங்கள், புத்த மததத்துவங்கள் போன்றவற்றுடன் புதிய நூலகம் ஒன்றை இந்தியாவில் உருவாக்க போகிறோம். இந்த நூலகத்தில் உலக அளவிலான அனைத்து புத்த இலக்கியங்களும் இடம் பெறும்.

அவற்றை டிஜிட்டல் முறையில் காப்பி எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஆராய்ச்சிகளுக்கும் இது உதவியாக இருக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.