
யாழில் இன்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் இன்று 412 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூவருக்கும் வடக்கில் தனிமைப்படுத்தல் நிலையத்திலுள்ள வெளி மாகாணங்களைச் சேர்ந்த மூவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
யாழ். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், கிளிநொச்சி – பாரதிபுரத்தைச் சேர்ந்த இருவருக்கும் இவ்வாறு தொற்று
உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அத்தோடு முழங்காவில் கடற்படை முகாமில் 2 பேருக்கும், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.