
தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயம்!
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உள் பக்கமாக 200 மீற்றர் தூரத்திற்கு அரிப்பு ஏற்பட்டுள்ளது.
குளத்தினை பாதுகாப்பதற்காக தற்காலிகமாக மண்மூடைகள் பயன்படுத்தப்பட்டு பாதுகாப்பு வேலி அமைக்கும் நடவடிக்கையில்; நீர்ப்பாசன திணைக்களத்தினர் ஈடுபட்டுவருவதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த குளக்கட்டிற்கு முழுமையாக அலைக்கல்லு பயன்படுத்தாமை காரணமாகவே இந்த அரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தண்ணிமுறிப்பு குளமானது 21 அடி வரை நீரை சேமிக்க கூடியதாக இருப்பினும் தற்போது 20.3 அடி வரை நீர்மட்டம் உயர்ந்த நிலையில் இந்த அரிப்பு ஏற்பட்டிருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் குளங்களுள் நான்காவது பெரிய குளம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.