பொதுமக்கள் நடமாட்டங்களை கட்டுப்படுத்தி செயற்பட வேண்டும் - அஜித் ரோஹண

பொதுமக்கள் நடமாட்டங்களை கட்டுப்படுத்தி செயற்பட வேண்டும் - அஜித் ரோஹண

2021 ஆம் ஆண்டின் முதலாவது ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினம், பொதுமக்கள் நடமாட்டங்களை கட்டுப்படுத்தி செயற்பட வேண்டும் என காவல்துறையை கோரியுள்ளது.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாதமை தொடர்பில் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி குறித்த குற்றச்சாட்டுகளில், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 75 ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.