
வணிக நிறுவனமொன்றிற்கு 01 மில்லியன் ரூபா அபராதம்
அதிக விலைக்கு தண்ணீர் போத்தலை விற்றதற்காக மஹரகமவில் உள்ள வணிக நிறுவனமொன்றிற்கு 01 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து, கங்கொடவில நீதவான் நீதிமன்றம் நேற்று (27) குறித்த தொகையை அபராதமாக விதித்துள்ளது.