
நேற்றைய தினம் அதிகளவான தொற்றாளிகள் கொழும்பில் பதிவு!
நாட்டில் நேற்றைய தினம் தொற்றுறுதியான 468 பேரில் 183 பேர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
அவர்களில் மட்டக்குளி பகுதியில் 82 பேர் அடங்கியுள்ளதாக கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு அடுத்தப்படியாக கண்டி மாவட்டத்தில் நேற்றைய தினம் 73 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதுடன் அவர்களில் 30 பேர் கண்டி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கம்பஹாவில் 72 பேருக்கும், குருநாகலையில் 28 பேருக்கும், பொலன்னறுவையில் 19 பேருக்கும், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் தலா 12 பேருக்கும் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதேவேளை, மொனராகலை - படல்கும்பர பகுதியில் மேலும் இரண்டு பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அந்த பகுதிக்கு பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இதன்படி படல்கும்பர பிரதேசத்தில் இதுவரை 61 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளர்.
மொனராகலை மாவட்டத்தில் அதிகளவிலான கொரோனா நோயாளர்கள் படல்கும்பர பிரதேசத்திலேயே பதிவாகியுள்ளனர்.
அத்துடன் பசறை பிரதேசத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்டது.
பசறை ஹிங்குருகடுவ பகுதியில் இனங்காணப்பட்ட தொற்றுறுதியானவருடன் நெருங்கிய தொடர்பை பேணிய 6 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 43 வயதான பெண்ணொருவருவக்கு இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர் வீ.இராஜதுரை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, லிந்துலையில் மேலும் 10 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அக்கரபத்தனை பொதுசுகாதார பரிசோதகர் புஸ்பகாந்தன் இதனை தெரிவத்துள்ளார்.