
நொடிப்பொழுதில் பறிக்கப்பட்ட இருவரின் உயிர்
நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி - கற்பிட்டி வீதியில் தலுவ 06வது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனியார் பேருந்து ஒன்று வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது, பேருந்தில் இருந்த இருவர் பேருந்தில் இருந்து இறங்கி பேருந்தின் பின்னால் காத்திருந்த நிலையில், பாலாவி திசையிலிருந்து கற்பிட்டி திசை நோக்கிச் சென்ற லொறி ஒன்று இருவர் மீதும் பேருந்து மீதும் மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தனர்.
இறந்தவர்கள் 15 மற்றும் 74 வயதான ஜா-எல மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.